#MI vs RCB:டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச முடிவு….

MI vs RCB:இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்றைய ஐபிஎல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதவுள்ளன.

இந்நிலையில்,டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.இதுவரை,இரு அணிகளும் நேருக்கு நேராக இதுவரை 28 முறை மோதியது, அதில் 17 போட்டிகளில் எம்ஐ வெற்றி பெற்றது, ஆர்சிபி 11 போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் (விளையாடும் XI): ரோஹித் சர்மா (c), குயின்டன் டி காக் (w), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (விளையாடும் XI): விராட் கோலி (c), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (w), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், ஷாபாஸ் அகமது, டேனியல் கிறிஸ்டியன், கைல் ஜேமீசன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.