மேட்டூர் அணயில் இருந்து நாளை பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதுவரை யில்லாத அளவு நீர்வரத்து அதிகரித்து அதிகரித்து வருவதால் நீர் திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேட்டூர் அணையில், நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 85 அடியை எட்டியுள்ளது. ஆதலால் நீர் பாசனத்திற்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.