100 அடி எட்டும் மேட்டூர் அணை !படிப்படியாக உயரும் அணை நீர்மட்டம்

ஒரே நாளில் மேட்டூர் அணையின் அணையின் நீர்மட்டம் 15 அடியாக உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்து வருகிறது.கர்நாடகா,கேரளம் மற்றும் தமிழகத்தில் உள்ள நீலகிரி ,கோவை ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

கர்நாடகாவில்  பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது . கபினி அணை  ,கிருஷ்ணராஜசாகர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.இதனால் அங்கு அதிக அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.எனவே தமிழக அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் நீர்மட்டம்  காலை 82.62 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணையின் அணையின் நீர்மட்டம் 15 அடியாக உயர்ந்துள்ளது.தற்போது மேட்டூர் அணையின் நீர்வரத்து  1,65,000  காண அடியாக உள்ளது.மேலும்  மாலைக்குள் 100 அடியை எட்டும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.