மேடையில் மனம் உருகிய ரித்விகாவின் தந்தை…..!!!!

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னராக ரித்விகா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மக்கள் தாங்கள் எதிர்பார்த்த விதமாகவே ரித்விகா வெற்றி பெற்றதையடுத்து மக்கள் மத்தியில் ரித்விகாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து மேடையில் பேசிய ரித்விகாவின் தந்தை மிகவும் மனமுருகி பேசினார். அவரது கண்களில் வழிந்தது ஆனந்த கண்ணீராக இருந்தாலும், ரசிகர்களை கண்கலங்க செய்தது.
இதனையடுத்து அவர் கமலை குறித்து மிகவும் பெருமையாக பேசியுள்ளார். ‘கமல் முன்னிலையில் இவ்வளவு மக்களிடம் நின்று பேசுவதற்கு, நான் என்ன புண்ணியம் செய்து என் மகளை பெற்றேனோ தெரியவில்லை ‘ என ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment