கொடநாடு மர்மம் CBI விசாரணை கோரும்  மேத்யூ சாமுவேல்….!!

கோடநாட்டில் கொள்ளை,கொலை_யின் மர்மம் குறித்து C.B.I விசாரணை கோர உள்ளதாக மேத்யூ சாமுவேல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கோடநாட்டில் கொள்ளை,கொலை அங்கு நடந்த மர்மங்களுக்கு காரணம் தமிழக முதல்வர் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் மறுப்பு தெரிவித்து இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்தது.இது தொடர்பாக தனிப்படை போலீசார் சயன் மற்றும் மனோஜை போலீசார் கைது செய்தனர் .

இந்நிலையில் இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மேத்யூ சாமுவேல் , நான் வெளியிட்ட செய்தி முதல்வர் பழனிசாமிக்கு எதிரானதுதான், ஆனால் தனிப்பட்ட கருத்து மோதல் இல்லை என்றும் மேலும் இது தொடர்பாக C.B.I விசாரணை கேட்டு வழக்கு தொடுக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment