#IPL2022: டெல்லி எதிர்கொள்ளும் பஞ்சாப் அணி.. வெற்றிபெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 32-வது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள ப்ரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 13 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 15 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. அதேபோல பஞ்சாப் அணி, 6 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது. இந்த போட்டி, இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக கருதப்படுவதால், இன்றைய போட்டி சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எதிர்பார்க்கப்படும் XI:

டெல்லி கேபிட்டல்ஸ்:

டேவிட் வார்னர், ப்ரித்வி ஷா, ரோவ்மேன் பவல், ரிஷப் பந்த் (கேப்டன் \ விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், சர்ஃபராஸ் கான், ஷர்துல் தாக்கூர், அக்ஸர் படேல், முஸ்தபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அகமது.

பஞ்சாப் கிங்ஸ்:

ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோவ், ஒடியன் ஸ்மித், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ககிசோ ரபாடா, ஷாருக் கான், வைபவ் அரோரா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.