மார்ச் 12 ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு;இன்று முதல் விண்ணப்பம் – தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு!

டெல்லி:முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் என்று மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

நடப்பு 2022 ஆம் ஆண்டில் MD,MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு ( NEET – PG ) வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் கணினி அடிப்படையில் நடைபெறும் என்று மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி,முதுநிலை நீட் தேர்வுக்கு இன்று மாலை 3 மணி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு 11:55 மணி வரை nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் முதுநிலை நீட் தேர்வின் முடிவுகள் மார்ச் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.