அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர்-அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர் என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை .ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை. ஆளுமை மிக்க தலைமையை உருவாக்க வேண்டும் என்று பேசினார்.அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது.

இதன் பின் நேற்று அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என கூறிய எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் திடீரென  ஆலோசனை செய்தார்.அப்போது அவர் பேசுகையில்,அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அது நிறைவேறாது .தோல்வியில் இருந்து அதிமுக மீண்டு எழும் என்ட்ரி பேசினார்.