என்னை மன்னித்துவிடு…த்ரிஷா விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டார் மன்சூர் அலிகான்!

சர்ச்சை பேச்சு தொடர்பாக நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திரையுலகமே கொந்தளித்தது. இதையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இதனையடுத்து, நேற்று விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் முன் ஜாமின் கோரி மனு தாக்கலும் செய்திருந்தார். பின்னர், உடல்நிலை சரியில்லா காரணத்தால் ஆஜராக கால அவகாசம் கேட்டிருந்த நிலையில், நேற்று மதியம் 2.30 மணி அளவில் சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஆஜராகிறேன் என கூறினார்.

ஜாலியா பேசினேன் த்ரிஷா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க! மன்சூர் அலிகான் பேட்டி

அதன்படி அவர் ஆஜரான நிலையில், அவரிடம் 35 நிமிடங்களுக்கு மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்ததும் வெளியே வந்த மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றையும் கொடுத்தார். அதில் பேசிய மன்சூர் அலிகான் ”அந்த வீடியோவில் பேசியது நான் தான். அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன், நிஜமாக தவறான எண்ணத்தில் கொடுக்கவில்லை.

நான் ஜாலியாக பேசியதை த்ரிஷா தவறாக புரிந்து கொண்டார். மற்றபடி என்ன ஒரு அர்த்தமும் வைத்து நான் அப்படி பேசவில்லை. நான் அப்படி பேசியதால் நடிகை த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” என்று கூறினார்.

இவ்வாறு கடந்த ஒரு வாரம் காலமாக இந்த விவகாரம் எங்கே பார்த்தாலும் தலைப்பு செய்திகளாக இருந்தும், இந்த சர்ச்சை கூறிய பேச்சுக்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கமால் இருந்து வந்த  நிலையில், இன்று இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்புக் கேட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்

தற்போது, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்த நிலையில் இன்று “சக நடிகை த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு” என அறிக்கையை வெளியிட்டு மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மீண்டும் தள்ளிப்போன ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் – கௌதம் மேனன் வருத்தம்!

இது தொடர்பாக தனது அறிக்கையில், ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது.

எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு…இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.