பக்தர்களின் சரண கோஷங்கள் முழங்க… சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை.!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவமபர்) 16ஆம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17, கார்த்திகை 1ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்றிலிருந்து சரியாக 41 நாள் ஒரு மண்டலம் கழித்து இன்று (டிசம்பர் 27) மார்கழி மாதம் 11ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  மண்டல பூஜை நிகழ்வுக்காக இன்று அனுமதி பெறும் பக்தர்களின் எண்ணிக்கையானது 70 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜைக்கு தயாராகும் சபரிமலை.! மீண்டும் எப்போது நடை திறப்பு.?

மண்டல பூஜை நடைபெறுவதை ஒட்டி, நேற்று திருவிதாங்கூர் மகாராஜா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தானமாக அளித்த 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி மலை பாதை வழியாக நேற்று சபரிமலைக்கு கொண்டுவரப்பட்டது. தங்க அங்கி கொண்டு வருவதை ஒட்டி நேற்று பிற்பகல் முதல் மாலை வரையில் மலை பாதையில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படவில்லை. நேற்று மாலை 6.30 மணிக்கு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு 11 மணி வரை பக்த்ர்கள் தரிசனத்திற்காக நடை திறந்து இருந்தது.

இன்று மண்டல பூஜை தினத்தன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தற்போது சபரிமலையில், பகதர்கள் சரண கோஷங்கள் விண்ண பிளக்க மண்டல பூஜை விழா தொடங்கியுள்ளது. தற்போது பக்கதர்களுக்கு இன்று மதியம் 1.30 மணிவரையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்ட்டு இரவு 11.30 மணி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர்.

மண்டல பூஜை முடிந்து இன்று இரவு 11.30மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மகர விளக்க பூஜைக்காக ஜனவரி 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும். ஜனவரி 31 முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். அதுக்கடுத்து ஜனவரி 20 ஆம் தேதி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.