மாநாடு கண்டிப்பாக நடைபெறும்! சிம்புவின் தயார் கொடுத்த உறுதிமொழி!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் மாநாடு, இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருந்தது. இப்படத்திற்கு முதல் போஸ்டேரெல்லாம் வெளியானது. ஆனால் படத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படம் டிராப் என செய்திகள் வெளியாகின.
இதற்கடுத்துதான் சிம்புவே தயாரித்து இயக்கி நடித்து புதிய படமாக மகா மாநாடு எனும் படத்தை எடுக்க உள்ளார் என தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து தற்போது வெளியான தகவலின் படி, சிம்பு தரப்பில் இனி அவரது கால்ஷீட்டை அவரது தாயும், தங்கையும் கவனிக்க உள்ளனராம். இனி சிம்பு கரெக்ட்டாக காலை 10 மணி முதல் 6 மணி வரை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பாராம். இந்த உறுதி மொழியை சிம்புவின் தாயாரே கூறி மாநாடு படம் மீண்டும் தொடங்குவதற்காக கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
இதனால் மீண்டும் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.