நிதியை திரும்பப்பெற்ற கர்நாடக அரசு : ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்த மம்தா பானர்ஜி

  • கர்நாடக அரசு  மங்களூருவில் இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அறிவித்து திரும்ப பெற்றது.
  • இருவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 19-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரு இடத்தில் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.இந்த துப்பாக்கி சூட்டில்  போராட்டத்தில் ஈடுபட்ட அப்துல் ஜலீல், நவுசீன்(23) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.இதனால் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.மேலும் இந்த போராட்டத்திடி போராட்டக்காரர்கள் போராட்டத்திற்கு முன் கற்கள் உள்ளிட்ட  பொருட்களை எடுத்த வைப்பது போன்ற வீடியோ எடியூரப்பாவிடம் காண்பிக்கப்பட்டது.

இதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா, மங்களூரு கலவரம் திட்டமிட்ட சதி.இது தொடர்பாக  விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிதி தற்போது  நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில், மங்களூருவில் போராட்டத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.