அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது -மத்திய அரசு பாராட்டு

அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு  தெரிவித்துள்ளது.

கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .எனவே தான் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ,  அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.அனைத்து அம்மா உணவகங்களிலும் காலையில் இட்லி, மதியம்  சாம்பார் சாதம், தக்காளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு  தெரிவித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளது.  ஊரடங்கு காலத்தில் 140.38 லட்சம் இட்லி, 53.24 லட்சம் கலவை சாதம், 37.85 சப்பாத்தி வழங்கப்பட்டுள்ளது.மொத்தமாக 85 லட்சம் மக்கள் அம்மா உணவகத்தின் மூலம் பயனடைகின்றனர்.