#IPL2022: முக்கியமான இரண்டு வீரர்கள் உள்ளே.. பலம் பெற்ற டெல்லி!

இன்றைய போட்டியில் டெல்லி அணியில் 3 மாற்றங்கள் செய்துள்ளது. அதன்படி, டேவிட் வார்னர், அன்ரிச் நோர்க்யா மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

15-வது ஐபிஎல் தொடர் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 15-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது.

இன்றைய போட்டியில் டெல்லி அணியின் 3 அதிரடி மாற்றங்கள் செய்துள்ளது. இதுவரை டெல்லி அணி இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 1 வெற்றி மற்றும் 1 தோல்வியை சந்தித்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் வார்னர் மற்றும் அன்ரிச் நோர்க்யா இல்லாததால், டெல்லி அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி அணியில் 3 மாற்றங்கள் செய்துள்ளது. அதன்படி, டிம் சேஃபெர்ட், கலீல் அகமது மற்றும் மந்தீப் சிங் அவர்களுக்கு பதில் டேவிட் வார்னர், அன்ரிச் நோர்க்யா மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர்.