சற்று முன்…சமூக நீதித்துறை அமைச்சர் மருத்துவமனையில் திடீர் அனுமதி !

மகாராஷ்டிரா மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சரும் NCP தலைவருமான தனஞ்சய் முண்டே மாரடைப்பால் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து,அமைச்சர் தனஞ்சய் முண்டேவை மருத்துவமனையில் சந்தித்த பிறகு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில்:”அவர் மயங்கியதால்,உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.தற்போது கவலைப்படத் தேவையில்லை. மாலைக்குள் அமைச்சர் தனஞ்சய் முண்டே ஐசியூவில் இருந்து மாற்றப்படுவார்”,என்று தெரிவித்துள்ளார்.