நம் பாரதியின் எழுத்து இன்னும் சுதந்திரம் பேசும்.. மகாகவியின் மறக்கமுடியாத சில சரித்திர பக்கங்கள்…

சுதந்திர வேட்கையினை மக்கள் மத்தியில் தனது இலக்கியம் மூலம் உயிரூட்டிய நம் மகாகவி பாரதியின் சிறு குறு குறிப்பு. 

1882ஆம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். தனது பதினோராம் வயதிலேயே கவி பாடும் ஆற்றல் கொண்டதால், பின்னாளில் எட்டயபுரம் மன்னரின் அரசவை கவிஞர் ஆனார்.

அவர் வாழ்ந்த காலம் தான் சுதந்திரத்திற்கான போராட்டமும், மக்களுக்கு சுதந்திரம் மீதான வேட்கையும் தலைதூக்க ஆரம்பித்த காலம்.  அப்போது தனது பாடல்கள் மூலம் சுதந்திர வேட்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க பெரிதும் உதவி செய்தார் மகாகவி பாரதியார்.

அதேபோல், தமிழ் மொழியை பற்றி இவர் புகழ்ந்து பேசாத நாளில்லை என்றே கூறலாம். ‘யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என தமது தாய் மொழி தமிழை பற்றி உள்ளதை கூறி உயர்த்தி பாடுவார் மகாகவி பாரதி.

பாரதியார் பல்வேறு இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றிலும் புலமை பெற்றிருந்ததால், ஆதலால் பிறமொழி இலக்கியங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கவும் செய்துள்ளார். இவர் பத்திரிக்கை ஆசிரியராகவும், பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்’

இந்தப் பாடல் வரிகளே போதும் நமது சுதந்திர வெற்றியை நம்முள் இன்னும் கடத்திச் செல்வதற்கு.. குறுகிய காலத்திலேயே மக்களிடம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாலோ என்னவோ , தனது 39வது வயதிலேயே தன் உயிர் பிரிந்தார் மகாகவி பாரதியார்.

ஆனால் இன்னும் அவர் கவிதைகள் தமிழர்கள்  மத்தியில் இருந்துகொண்டே இருக்கும். இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த பாரதியின் தாக்கம் குறையாது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment