டாஸ்மாக் கடைகளை மூட கோரிய மனுவை தள்ளுபடி செய்த மதுரை கிளை.!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக  தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் பல சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு தரப்பில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் வருவதை தடுக்க அதிக மக்கள் கூடும் டாஸ்மாக் கடைகளை வருகின்ற 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது .

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இதுபோன்ற வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த மனு தள்ளுபடி செய்வதாக கூறினார்.

 

author avatar
murugan