மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவு – ஜே.பி நட்டா

விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிந்ததும் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஜே.பி நட்டா தகவல்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இந்த நிலையில், மதுரையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்  பேசிய ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது என்றும் கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும் கூறினார். மேலும், மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை; மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment