அரசு மரியாதையுடன் M.P ராஜேந்திரன் உடல் அடக்கம்…!!

  • விழுப்புரம் மாவட்ட அதிமுக M.P ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
  • M.P  ராஜேந்திரன் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட அதிமுக மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் விழுப்புரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து காரில் சென்னை சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவரது கார் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது அதிமுக தொண்டர்களை மிகவும் வேதனையடையவைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர்  மற்றும் அமைச்சர்கள்  உயிரிழந்த,நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ராஜேந்திரன் உலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு  இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்தனர். இந்நிலையில்  எஸ்.ராஜேந்திரன் M.P உடலுக்கு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment