IPL2022: டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்து வீச தேர்வு..!

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இரவு மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: 

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, டுவைன் பிராவோ, டுவைன் பிரிட்டோரியஸ், முகேஷ் சவுத்ரி, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி: 

கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, துஷ்மந்த சமீரா, ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
murugan