நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – சபாநாயகர் அறிவிப்பு!

மக்களவை கூட்ட தொடர் இன்றுடன் நிறைவு பெற்றுவதாக மக்களவை சபாநயார் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

17 வது நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்றது. இந்த அரசின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17 ம் தொடங்கியது. கேபினட் அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ப்பு மற்றும் புதிதாக சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. ஜூலை 5 ம் தேதி மத்திய அரசின் புதிய நிதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில்  முத்தலாக் மசோதா,NIA மசோதா , புதிய மோட்டார் வாகன சட்டம் மற்றும் காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா ஆகிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைவதாக கூறி சபாநாயகர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்து தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்துள்ளார்.