மக்களவை தேர்தல்:அமமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

  • தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.
  • மக்களவை தேர்தலுக்கான அமமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

2019 மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ  (Social Democratic Party of India) கட்சிக்கு, மத்திய சென்னை மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல் மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில்  மக்களவை தேர்தலுக்கான அமமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment