சிறுமி வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சிறுமி வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

  • சம்பவத்தில் இறந்து போன சிறுமியை அங்கிருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்க விட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
  • பூபதி உள்ளிட்ட 5 பேரை வாழப்பாடி காவல் துறை கைது செய்து அவர்கள் மீது கூட்டு வன்புணர்வு கொலை மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சென்றாயம்பாளையத்தை சேர்ந்த பரமசிவம்.இவரின் 10 வயது மகளை மதுபோதையில்  கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்பாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் அருகிலுள்ள பெருமாள் கோயில் மலைக்கு தூக்கிச்சென்று கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இறந்து போன சிறுமியை அங்கிருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்க விட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  பூபதி உள்ளிட்ட 5 பேரை வாழப்பாடி காவல் துறை கைது செய்து அவர்கள் மீது கூட்டு வன்புணர்வு கொலை மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு  இருதரப்பு விசாரணைகளும் முடிவடைந்தது.இந்த வழக்கில் நீதிபதி விஜயகுமாரி இன்று தீர்ப்பு வழங்கினார். இதன்படி 5 பேரும் குற்றவாளிகள் எனக் கூறிய அவர்களுக்கு  இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *