உள்ளாட்சி தேர்தல் : தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு

  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  
  • உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் .வாக்கு எண்ணிக்கை 2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன.மேலும் வேட்புமனுக்களையும் தாக்கலும் செய்து வருகின்றது.

இந்த நிலையில் வேல்முருகன் தலைமையில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளது.தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னம் ஒதுக்கியுள்ளது.