#BREAKING: இன்று மாலை 5 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு..!

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களை வெளியிட்டுயிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

author avatar
murugan