தமிழ்நாட்டிலும் சட்டமியற்ற அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ்

மத்தியப் பிரதேசத்தை போல தமிழ்நாட்டிலும் சட்டமியற்ற அரசு முன்வர வேண்டும் என்று  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மாநில அரசு வேலைகள் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்தார். இதற்காக அரசு தேவையான சட்ட விதிகளை செய்து வருவதாகவும், மத்திய பிரதேசத்தின் வளங்கள் மாநில இளைஞர்களுக்கானது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,மத்தியப் பிரதேசத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் அம்மாநில மக்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டிலும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு, சட்டமியற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.