கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும், கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.