ஐபிஎல் தொடரில் இருந்து குல்தீப் யாதவ் விலகல்..!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) சூழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஐபிஎல் 2021 இல் இருந்து விலகியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் 2021 (ஐபிஎல் 2021) இரண்டாம் கட்டத்தில் சிறப்பாக செயல்படும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) சூழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஐபிஎல் 2021 இல் இருந்து விலகியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியின் போது குல்தீப் யாதவ் காயமடைந்தார். இதனால், குல்தீப் யாதவ் விலகியுள்ளார். குல்தீப் யாதவின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது இன்னும் தெரியவில்லை. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட குல்தீப் யாதவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாய்ப்பு அளிக்கவில்லை.

குல்தீப் கடந்த சீசனில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அவரின் ஃபார்ம் மோசமாக இருந்தாலும் அவரால் 1 விக்கெட் மட்டுமே எடுக்க முடிந்தது. குல்தீப் யாதவ் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் வெறும் 9 போட்டிகளில் விளையாடினார். டி 20 உலகக் கோப்பையில் கூட குல்தீப் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan