பத்திரிகையாளரிடம் ‘என்ன சாதி?’ என கேட்ட விவகாரம்! கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு!

தென்காசி மக்களவை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இது குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர்களி சந்தித்த கிருஷ்ணசாமி பேசுகையில்,

பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் அதிகமான கேள்விகள் கேட்க, அதற்க்கு பதிலளிக்க திணறிய அவர் அந்த பத்திரிகையாளரை பார்த்து ‘ நீ எந்த ஊர் ? என்ன சாதி ?’ என கேட்டுவிட்டார் இதனை அடுத்து பத்திரிகையாளர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து சென்னை கொரட்டூர் பகுதி காவல் நிலையத்தில், பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் அவர் மீது, ‘ பத்திரிக்கையாளர்களை சாதிய ரீதியிலும், ஒருமையில் அழைத்ததாகவும்’ கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. பிறகு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment