கொல்கத்தா விமான நிலையம் இந்த இரண்டு நாட்கள் இயங்காது.!

இன்றும், அடுத்து வரும் ஞாயிற்று கிழமையான 29ஆம் தேதியும், கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வாரத்தில் ஒருநாள் முழு முடக்கத்தை அம்மாநில அரசு கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில், இன்றும் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையான 29ம் தேதியும் முழு முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினங்களில் கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.