துணை கேப்டனாக கே.எல்.ராகுல் – ஜெய் ஷா அறிவிப்பு..!

தென்ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு துணை கேப்டனாக கே.எல்.ராகுலை நியமித்து பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும்  இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக ரோஹித் சர்மா  நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், வலை பயிற்சியின் போது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால், டெஸ்ட் அணிக்கு துணை கேப்டன் யார்..? என்ற கேள்வி எழுந்தது. இந் நிலையில் துணை கேப்டனாக கே.எல்.ராகுலை நியமித்து உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். கே.எல்.ராகுல் 40 டெஸ்டுகளில் விளையாடி 6 சதம் உள்பட 2,321 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30 வரையும்,
இரண்டாவது டெஸ்ட்: ஜனவரி 03-07 வரையும்,
மூன்றாவது டெஸ்ட்: ஜனவரி 11-15 வரையும் நடைபெறவுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 19-ஆம் தேதி
இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 21-ஆம் தேதி
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

author avatar
murugan