#IPL2022: டாஸ் வென்று ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்த கொல்கத்தா!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெறவுள்ள 47-வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 47-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் ( கேப்டன் / விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆரன் பின்ச், சுனில் நரைன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, சிவம் மாவி.