கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் மேலும் நீட்டிப்பு..?

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் மேலும் நீட்டிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கடந்த 2017-ஆம்  ஜூலை 1-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில்,  2021- ஜூலை 1 -ஆம் தேதி வரை ஓராண்டுக்கு பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் ஜூலை 1-ஆம் தேதியுடன் பதவி காலம் முடிவடையும் நிலையில் மேலும், ஓராண்டுக்கு கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

author avatar
murugan