தவறான வழியில் வந்த பேருந்தை சரியான வழிக்கு மாற்றி கெத்து காட்டிய பெண்!

தற்போது வாகன விதிமீறல் சட்டம் தீவிரமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதனை சமூக வலைத்தளங்களில் நாம் பார்த்துதான் வருகிறோம்.

இந்நிலையில் கேரளவில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு அரசு பேருந்து, தவறான பாதை அதாவது, இருவழி பாதையில், நடுவில் உள்ள வெள்ளை கோட்டை தாண்டி எதிர்முனை நோக்கி ஓட்டுநர் பேருந்தை இயக்கி வந்து கொண்டிருந்தார்.

அந்த சாலையின் சரியான வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் அந்த பேருந்துக்கு வழிவிடாமல், பேருந்தின் முன் வண்டியை நிறுத்திவிட்டார். பின்னர் அந்த ஓட்டுனர் பேருந்தை சரியான பாதையில் ஓட்டி சென்றார்.

போக்குவரத்து அதிகாரிகளும், கடுமையான அபராதங்களும் மட்டுமே விதிமீறல்களை சரிசெய்து விடாது. இது போன்ற விதிமீறல்களை தைரியமாக சரி செய்துவரும் நபர்களாலும் விதிகள் பாதுகாக்கப்படும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.