முல்லை பெரியாறு நீரை திறக்கக்கோரி கேரளா முதல்வர் கடிதம்!

முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்து விடக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரளா அரசு கடிதம்.

முல்லை பெரியாறு அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி முதல்வர் முக ஸ்டாலினுக்கு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். முல்லை பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையில், படிப்படியாக நீரை இப்போதிலிருந்தே திறக்க கோரிக்கை வைத்துள்ளார்.  தண்ணீரை திறக்கும் 24 மணிநேரத்திற்கு முன்னர் அறிவிப்பு கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையை கருத்தில் நீர் வெளியேற்றம் செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நீர்வரத்தை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி தமிழக அரசுக்கு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

kerala

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment