கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா!!

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது ராஜினாமா கடித்தை அம்மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார்.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கேரளாவில் இடதுசாரி கூட்டணிகள் அதிகளவிலான இடங்களில் முன்னணி வகித்த நிலையில், 99 இடங்களில் 81 தொகுதிகளில் இடதுசாரியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் தொடர்ந்து 2-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள பினராயி விஜயனுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 2ம் முறையாக ஆட்சியை பிடித்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமதுவிடம் அளித்துள்ளார். மேலும், இரண்டாவது முறையாக கேரளாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரனாயி விஜயன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்