எங்களுக்கே தெரியாதுங்க..’எல்லாம் தோனி முடிவு தான்’ ! சிஸ்கே CEO காசி விஸ்வநாதன் பேச்சு!

CSK கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்கிறது.  இந்த போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Read More – தோனிக்கு ‘நோ’.! CSKவின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.!

இதற்கிடையில் நேற்று சென்னை அணி ரசிகர்களுக்கு  அதிர்ச்சி அளிக்கும் விதமாக சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. இது தோனி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே தோனி விளையாடுகிறாரா?  இல்லையா? என்பது போலவும் கேள்விகள் எழும்ப தொடங்கியது.

READ MORE- CSKvsRCB : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்! இப்படி இருந்த சூப்பர் தான் ..!

இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் மாற்றம் குறித்தும் தோனி குறித்தும்  சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “என்னைப் பொறுத்தவரை தோனி எது செய்தாலும் அது நல்லதுக்கு தான் செய்வார் சென்னை அணிக்கு ருதுராஜ் கேப்டனாக செயல்படுவர் என்பது   எங்களுக்கு தெரியவே தெரியாது.

ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் எல்லாம் சேர்ந்து  புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வில் தான்   தோனி இதனை அறிவித்தார். இது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தோனி ஒரு முடிவை எடுக்கிறார் என்றால் அந்த முடிவை சரியானதாக  இருக்கும் இரு நாங்கள் நம்புவோம்.  எனவே அவருடைய முடிவை  நாங்கள் ஆதரித்தோம்.

Read More – சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டன் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம்!

அவருடைய முடிவை நாங்கள் மதிக்கவும் செய்கிறோம். தோனி  என்னன்னவெல்லாம் சொல்கிறாரோ அது அனைத்தையும் நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுவோம் மற்றபடி இந்த முடிவு முழுக்க தோனி எடுத்த முடிவு தான். கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்ட முடிவு குறித்து ஜடேஜாவும் ஆதரித்துள்ளார்” எனவும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.