காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை-கர்நாடக சபாநாயகர்

கர்நாடக அரசியலில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள்     சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .இதனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள  அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.மீதமுள்ள எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள்.

இந்த நிலையில் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.அவர் கூறுகையில், காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எம்எல்ஏக்களுக்கு 17ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளேன். சட்டத்திற்குட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைச் செய்வேன் என்று தெரிவித்தார்.