காரைக்கால் மாணவன் கொலை – திடுக்கிடும் வாக்குமூலம் அளித்த சகாயராணி…!

காரைக்கால் பள்ளி மாணவன் பாலமணிகண்டனுக்கு, குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்தாக சகாயராணி வாக்குமூலம். 

காரைக்கால் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் சில நாட்களுக்கு முன்னர் குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். சக மாணவியின் தயார் சகாயராணி, தன் மகளை விட நன்றாக படித்து விட கூடாது என நினைத்து விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.

விஷம் அருந்திய மாணவன் பால மணிகண்டன் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், விஷம் கொடுத்த சகாயராணியை விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தற்போது புதுசேரி மத்திய சிறையில்அடைக்கபட்டுள்ளார்.

இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் பால மணிகண்டனுக்கு குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்தாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment