#Kalaignar99:பழம்பெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸுக்கு விருது;ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.இதற்காக,அரசு சார்பில் சென்னையில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில்,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி சென்னை,அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து,பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.வயது மூப்பு காரணமாக ஆரூர் தாஸ்(வயது 90) அவர்கள் தலைமை செயலகத்திற்கு வர இயலாத சூழலில் தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கே நேரில் சென்று விருது வழங்கி முதல்வர் கெளரவித்துள்ளார்.மேலும்,விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுதொகையும் ஆரூர் தாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதைப்போல,கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்,கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது,ரூ.5 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

 

 

Leave a Comment