#JustNow: மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

மதுரையில் அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் இன்று ஆலோசனை.

மதுரையில் அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். நிதியமைச்சர், நிதித்துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவில் இருந்து குணமடைந்த முதல்வர் சில நாட்கள் பின் இன்று தலைமை செயலகம் சென்றுள்ளார்.

இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47-வது கூட்டம் சண்டிகரில் 2 நாள் நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த கவுன்சில் கூட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‛ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்டில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் முதல் வாரம் மதுரையில் இந்த கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு, குதிரை பந்தயம் மீதான ஜிஎஸ்டி குறித்து விவாதிக்கப்படும் என கூறியிருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment