#JustNow: இரட்டை அடுக்கு பேருந்துகள் மோதியதில் 8 பேர் பலி, பலர் காயம்!

உத்தரபிரதேசத்தில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மோதியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழப்பு.

உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் விரைவு சாலையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மோதியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் CHC ஹைதர்கர் சமூக சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள ( Trauma) மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

லோனிக்த்ரா போலீஸ் ஸ்டேஷன் இடத்தின் நரேந்திரபூர் மத்ராஹா கிராமத்திற்கு அருகே இரட்டை அடுக்கு பேருந்து மற்றொரு பேருந்து மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகளும் பீகாரில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தன. அப்போது,  விரைவுச் சாலையில் நின்று கொண்டிருந்த டபுள் டெக்கர் பேருந்து மீது வேகமாக வந்த மற்றொரு டபுள் டெக்கர் பேருந்து மோதிய விபத்துக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment