அயோத்தி வழக்கில் தீர்ப்பு ! ராகுல் காந்தி கருத்து

அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும்.இந்த கால கட்டத்தில் நாம் சகோதரத்துவோம் ,அன்பு மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.