நீதிபதி திரு லட்சுமணன் அவர்கள் காலமான செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்! ஓபிஎஸ் ட்வீட்!

நீதிபதி திரு லட்சுமணன் அவர்கள் காலமான செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.

நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர், சில நாட்களுக்கு முன் இவரின்  மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சமீபத்தில், திருச்சி தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், லட்சுமணனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில்,’ பொது இடத்தில் புகைபிடிக்கத் தடை என்பது போன்ற சிறப்பு மிக்க தீர்ப்புகள் பலவற்றை வழங்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.A.R.லட்சுமணன் அவர்கள் இன்று காலமான செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.