பத்திரிகையாளர்களுக்கு ரூ.3000 நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி

பத்திரிகையாளர்களுக்கு ரூ.3000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

வேளச்சேரியில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், கொரனா தாக்கம் உள்ள சூழலிலும் தொடர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு ( அரசு அங்கீகார அட்டை வைத்திருப்போர் ) ரூ 3000 நிதியுதவி வழங்கப்படும்.

ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசின் வருவாய் குறைந்துள்ள போதிலும் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்கப்படும்.வெளி மாநிலங்களில் தங்கி இருப்பவர்கள், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை இம்மாதம் இறுதி வரை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.