கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்தினை கண்டுபித்துவிட்டதாம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், அதனை அளிக்கும் மருந்தையும் கண்டுபிடிக்கும் முனைப்பில் அறிவியல் வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், ‘ கொரோனாவிற்கு எதிரான சிறந்த மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், அந்த மருந்தை விரைவில் மனிதர்களிடம் சோதித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.’ என அந்நிறுவனம் கூறியுள்ளது. 

மேலும், ‘ கொரோனாவிற்கு எதிரான இந்த ஆராய்ச்சியில் அமெரிக்க நிறுவனத்துடன் ஈடுபட்டுள்ளோம். இதற்காக 7000 கோடி முதலீடு செய்துள்ளோம். எனவும், இந்த மருந்தை செப்டம்பர் மாதம் மனிதர்களுக்கு பயன்படுத்தி சோதனை செய்துவிட்டு, அடுத்த ஆண்டு அனுமதி பெற்று பொதுமக்களுக்காக வழங்கப்படும்.’ எனவும்  அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.