துணை முதல்வராக 5 பேரை நியமிக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு !

ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில்  ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில் ஆந்திராவில் 5 பேரை துணை முதல்வராக நியமிக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று நடைபெற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெகன்மோகன் பேசியபோது  தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட ஐந்து பிரிவைச் சேர்ந்தவர்களை துணை முதல்வராக தேர்வு செய்ய இருப்பதாக கூறினார் என தகவல்  வெளியாகி உள்ளது.
 

author avatar
murugan