இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு ஜெயலலிதா நினைவிடம் திறப்பு…!

இன்று முதல் ஜெயலலிதாவின் நினைவிடம், மக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் கடந்த ஜனவரி 27-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், மக்களின் பார்வைக்கு திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து, இன்று முதல் ஜெயலலிதாவின் நினைவிடம், மக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.