திமுகவால் தான் ஜெயலலிதா மரணமடைந்தார்….!மக்களவை துணைசபாநாயகர் பரபரப்பு தகவல்

திமுகவால் தான் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Image result for தம்பிதுரைஇந்நிலையில் இது தொடர்பாக மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், திமுக வழக்கு தொடர்ந்ததால் மனவுளைச்சல் ஏற்பட்டதன் காரணமாக ஜெயலலிதா மரணமடைந்தார் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment