எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்தது-அமைச்சர் விஜயபாஸ்கர்

எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்தது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்தது. ஜல்லிக்கட்டில் முதல் முறையாக காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்தது  என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment